இலத்திரனியல் பயணச்சீட்டுகளை விநியோகிப்பதில் முறைகேடு – CID விசாரணை

ரயில்வே திணைக்களத்தால் ஆன்லைனில் டிக்கெட்டுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில்வே திணைக்களத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், இந்த பயணச்சீட்டு மோசடி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கையிடவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று  அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *