அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் திருமலையில் முக்கிய கலந்துரையாடல்..!

கைத்தொழில் துறைகள் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமாரவின் ஏற்பாட்டில் பிராந்திய கைத்தொழில் சேவை நிலையத்தின் பிராந்திய பணிப்பாளர் ( கிழக்கு மாகாணம்) கே. தயாபாரனின் ஒருங்கிணைப்பில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள தொழில் துறையினருக்கான கலந்துரையாடல்  நேற்றையதினம்(29) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

தொழில் துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பை அதிகரிப்பது கைத்தொழில் துறைகள் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

அந்த வகையில் கைத்தொழில் துறையில் உள்ள முக்கிய பிரச்சினைகளை அடையாளம் காணும் நோக்கில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள தொழில் துறையினர் எதிர்கொள்ளும் தடைகளை அடையாளம் கண்டு அதற்கான தீர்வுகளும் வழங்கப்பட்டன. தொழில் துறையினரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தக்க பதிலும் இதன்போது வழங்கப்பட்டது.

இதன்போது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா, பாராளுமன்ற உறுப்பினர் அக்மீமன கமகே ரொஷான் பிரியசஞ்சன, கைத்தொழில் அபிவிருத்திக்குரிய மேலதிக செயலாளர் மற்றும் பணிப்பாளர் உட்பட தொழில் துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *