இணையும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி! வரவேற்கும் தேரர்

 

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவதற்கான காலம் தாமதமாகிவிட்டாலும் தற்போது இணைவதற்கான விடயம் குறித்து கலந்துரையாடுவது நல்லது என மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பொட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரள மல்வத்த மகா விஹாரைக்குச் சென்று தேரரைச் சந்தித்து ஆசி பெற்ற போதே மகா நாயக்க தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்றைய காலகட்டத்தில் கட்சிப் பிளவுகள் ஒரு பொதுவான நிகழ்வாகிவிட்டதாகவும், ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமல்ல, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உட்பட பல கட்சிகளும் இரண்டு அல்லது மூன்று கட்சிகளாகப் பிரிந்துள்ளதாகவும் தேரர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *