மகிழங்காடு கிராமத்தில் நெற்செய்கையின் விளைச்சலைக் கணிப்பீடு செய்யும் வேலைத்திட்டம்

விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்டத்தின் கீழ்  கிளிநொச்சி மகிழங்காடு கிராமத்தில் நெற்செய்கையின் பயிர்வெட்டு அளவீட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கொமர்சியல் வங்கியின் நிதி உதவியுடன் யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் தொழில்நுட்ப உதவியின் கீழ் விவசாயத்திணைக்களத்தின் ஒத்துழைப்புடன்  மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் விளைச்சலைக் கணிப்பீடு செய்யும் வேலைத்திட்டம் நேற்று  முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட புள்ளிவிபரக் கிளையிடம் முன்வைக்கப்பட்ட  கோரிக்கைக்கு அமைவாக மேற்படி கிராமத்தில் கிளிநொச்சி மாவட்ட புள்ளிவிபரவியலாளர் S.ஜெயவிந்தன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட புள்ளிவிபர உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் பயிர்வெட்டு அளவீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *