ஊழல்வாதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருபோதும் பாதுகாக்காது; அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டு..!

ஊழல்வாதிகளை அரசாங்கம் பாதுகாப்பதாகக் கூறப்படுவதை நிராகரித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அரசாங்கத்திற்கு எதிராக உறுதியான ஆதாரங்களை முன்வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

“ராஜபக்ஷக்கள் கைது செய்யப்படும்போது சஜித் தான் முறைப்பாடு செய்கிறார். யோஷித ராஜபக்சவைக் கைது செய்த போது, ​​ஹர்ஷன ராஜகருணா மிகவும் காயப்பட்டதாகத் தோன்றியது” என்று ரத்நாயக்க கூறியதுடன், அவர் ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ச குடும்பம் அல்லது மக்களுடன் நிற்கிறாரா என்பதைத் தெளிவுபடுத்துமாறு பிரேமதாசவை வலியுறுத்தினார்.

“அரசாங்கம் செயற்படும் போது சஜித் பிரேமதாசவின் கட்சியும், நாமல் ராஜபக்சவின் கட்சியும், வீரவன்சவும், திருடர்களைப் பாதுகாக்கவும் ஒன்றுபடுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *