முல்லையில் மாவை சேனாதிராஜாவுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி..!

மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பிரதான சுற்றுவட்டப் பாதையில் இன்றையதினம்(31) அஞ்சலி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு பிரதேச இலங்கைத் தமிழரசுக் கட்சித் தொண்டர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார். 

அந்தவகையில் துக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் முல்லைத்தீவு பிரதான சுற்றுவட்டப் பாதை வளாகம் கறுப்பு, வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் உருவப்படம் வைக்கப்பட்டு,உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி உணர்வுபூர்வமாக இந்த அஞ்சலிகள் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *