UNPஉடன் கலந்துரையாடுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து விலகினார் திஸ்ஸ

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க விலகியுள்ளார்.

இரு தரப்பினரும் இது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர். 

 இந்த கலந்துரையாடல்களை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டது. 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *