
பிரபல பாதாள உலக உறுப்பினராக அறியப்படும் கனேமுல்ல சஞ்ஜீவ கொழும்பு நீதிவான் நீதிமன்றினுள் வழக்கு விசாரணையின் இடையே நேற்று முற்பகல் 10.00 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டார். பேலியகொடை பகுதியில் இரவு நேரம் பலாத்காரமாக வீடொன்றுக்குள் புகுந்து நபர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில், கொழும்பு மேலதிக நீதிவான் பவித்ரா சஞ்ஜீவனீ பத்திரன முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது இந்த சம்பவம் பதிவானது.




