
தெஹிவளை மீலாத் மகாவித்தியாலயத்தில் நிலவும் இடப் பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்து அந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிரணி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே, இவ்விவகாரத்தை இனவாத பிரச்சினையாக மாற்றுவதற்கு ஒரு சில தரப்பினர் முயற்சிப்பதாகவும் அதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது, அத்தோடு இவ்விவகாரத்திற்கு தீர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.




