
பதிவுசெய்யப்பட்ட ஒரு பள்ளிவாசலுக்கு 18 கிலோ என்ற அடிப்படையில் சவூதி அரேபியாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பேரீச்சம் பழங்களை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தெரிவித்தார். நாடளாவிய ரீதியிலுள்ள 2,740 பதிவுசெய்யப்பட்ட பள்ளிவாசல்களின் ஊடாகவே இந்த பேரீச்சம் பழங்கள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.




