இராணுவமயமாக்கல் கோரிக்கை; சிரியாவின் புதிய தலைவர்ளுக்கு இஸ்ரேல் சவால்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெற்கு சிரியாவின் பெரும்பகுதியை முழுமையாக இராணுவ மயமாக்கல் கோரியுள்ளார்.

ஜனாதிபதி பஷர் அல்-அசாத் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர், இஸ்ரேலுக்கும் சிரியாவின் புதிய தலைமைத்துவத்திற்கும் இடையில் மோதலை ஏற்படுத்தக்கூடிய ஒரு அறிவிப்பு இதுவாகும்.

ஞாயிற்றுக்கிழமை (23) இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளுடன் உரையாற்றும் போது நெதன்யாகு,

அசாத்தை தூக்கியெறிந்த இஸ்லாமியக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் (HTS) படைகளையோ அல்லது “டமாஸ்கஸின் தெற்கே உள்ள பகுதிக்குள் நுழைவதற்கு” புதிய சிரிய இராணுவத்தையோ இஸ்ரேல் அனுமதிக்காது.

புதிய ஆட்சியின் படைகளிடமிருந்து குனிட்ரா, டெரா மற்றும் சுவைடா மாகாணங்களில் தெற்கு சிரியாவை முழுமையாக இராணுவமயமாக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

அதேபோல், தெற்கு சிரியாவில் உள்ள ட்ரூஸ் சமூகத்திற்கு எதிரான எந்த அச்சுறுத்தலையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் – என்று கூறினார்.

Israeli army armored vehicles block a road leading to the town of Quneitra, Syria, Jan. 5, 2025. (AP Photo/Mosa'ab Elshamy, File)

கடந்த டிசம்பரில் அசாத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இஸ்ரேலியப் படைகள் தாங்கள் கைப்பற்றிய சிரியப் பகுதிக்குள் காலவரையின்றி இருக்கும் என்றும் அவர் கூறினார் – இது இஸ்ரேலிய மூலோபாயத்தில் ஒரு மாற்றமாக இருக்கும்.

1967 மத்திய கிழக்குப் போரின் போது கோலானின் பெரும்பகுதியை சிரியாவிடமிருந்து இஸ்ரேல் கைப்பற்றி பின்னர் இணைத்தது.

இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவில்லை.

இதனிடையே, சிரியாவின் புதிய இடைக்கால ஜனாதிபதி, HTS தலைவரான அஹ்மத் அல்-ஷாரா, இஸ்ரேலுக்கு மோதலை விரும்பவில்லை என்றும், 1973ல் மற்றொரு போருக்குப் பிறகு முடிவுக்கு வந்த இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒப்பந்தத்தை நிலைநிறுத்தத் தயாராக இருப்பதாகவும் இஸ்ரேலுக்கு உறுதியளிக்க முயன்றார்.

இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களுக்கு சிரியாவை தளமாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *