
நாம் இன்னும் சில தினங்களில் புனித ரமழான் மாதத்தை அடையவுள்ளோம். ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இம்மாதத்திலேயே அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கி வைத்தான். இம்மாதம் ஒவ்வோர் அடியானும் அல்லாஹ்வுடன் நெருக்கமான தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதற்காக அருளப்பட்டதாகும். இது துஆவினதும் பொறுமையினதும், ஸதகாவினதும் மாதமாகும்.




