அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் நினைவேந்தல்!

முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் (13) முன்னெடுக்கப்பட்டது.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்றலில் அமைக்கப்பட்டுள்ள அமிர்தலிங்கத்தின் திருவுருவ சிலையின் முன்றலில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

இதன்பொழுது ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவசிலைக்கு மலர் மாலையும் அணிவிக்கப்பட்டது.

நினைவேந்தலில் முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னைநாள் யாழ். மாநகர சபையின் உறுப்பினர் தங்க முகுந்தன் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply