பிரதேச சபை தலைவரின் மூக்கை வெட்டிய நெருங்கிய தோழி!

தெரணியகல பிரதேச சபையின் தலைவரை அவரது நெருங்கிய தோழி ஒருவர் சவரக் கத்தியால் தாக்கியுள்ளார்.

குறித்த பெண்ணின் தாக்குதலில் காயமடைந்த பிரதேச சபை தலைவர், தெரணியகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெரணியாகல பகுதியில் உள்ள கடைக்கு அருகில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், தெரணியகலை பிரதேச சபையின் தலைவரின் கார் கடைக்கு அருகில் நிறுத்தப்பட்டபோது, ​​அந்த பெண் சம்பவ இடத்திற்கு வந்திருந்தார்.

இருவரின் உரையாடலின் போது, ​​அந்த பெண் தலைவரை ரேஸர் பிளேடால் தாக்க முயன்றுள்ளார்.

எனினும், பிரதேச சபை தலைவர் அதைத் தடுக்க முயன்ற போதிலும், அவரது மூக்கு சவரக் கத்தியால் வெட்டப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை எனவும் சீதவாக்க பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply