ஈழம் என்றால் என்ன? – காணாமலாக்கப்பட்டோருக்கு நினைவுத்தூபி அமைத்தவரிடம் பொலிஸ் விசாரணை!

<!–

ஈழம் என்றால் என்ன? – காணாமலாக்கப்பட்டோருக்கு நினைவுத்தூபி அமைத்தவரிடம் பொலிஸ் விசாரணை! – Athavan News

காணாமலாக்கப்பட்டோர் நினைவாக நினைவுத்தூபி அமைத்தமை தொடர்பாக தனினிடம் பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் காணாமலாக்கப்பட்டோர் நினைவாக மறவன்புலவு சச்சிதானந்தத்தினால் கல்வெட்டுக்களுடன் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே பொலிஸ் உயர் அதிகாரிகள் தன்னிடம் விசாரணை நடத்தியதாக மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

ஈழம் என்றால் என்ன? என்று அவர்கள் தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.


Leave a Reply