இலங்கை இராணுவத்திரை விட விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்தவர் எனவே அவருக்கு மரியாதை செலுத்துங்கள் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் இராணுவத்தினரிடம் கூறியுள்ளனர்.
இலங்கையில் இராணுவத்தினரின் பயங்கரவாதம் உறுதிப்படுத்தப்படாத நிலையில் இருந்தது ஆனால் காலிமுகத்திடலில் நீங்கள் மேற்கொண்ட தாக்குதலில் அது உறுதியாகிவிட்டது.
இந்த குற்றங்களை முழு உலகமும் பார்த்து கொண்டு இருக்கின்றது.
சரத் பொன்சேகா கட்டளை வழங்கும்போதே ராணுவத்தினர் சரியாக பணியாற்றினர்.
மேலும் உங்களை விட விடுதலைப்புலிகள் இயக்கம் சிறந்தவை அவர்களுக்கு மரியாதை செலுத்துங்கள் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.






