<!–
பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் முழுவதுமாக அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.
மனுக்கள் மீதான விசாரணையின்போது சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பணங்களின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் சட்டமூலத்தில் சில திருத்தங்களை முன்மொழிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலத்தில் உள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களின் விசாரணை முடிவடைந்ததை அடுத்து தமது வியாக்கியானத்தை உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவித்தது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.