விமானக்குண்டு தாக்குதலின் 29வது நினைவேந்தல்

குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் விமானக்குண்டு தாக்குதலின் 29வது நினைவு தினம் இன்றையதினம் காலை நடைபெற்றது.

காலை 5.30 மணிக்கு திருப்பலியும் அதனைத்தொடர்ந்து நினைவு அஞ்சலி நிகழ்வும்  பங்குத்தந்தை அருட்பணி யாவிஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், விமானத் தாக்குதலில் உயிர் நீத்தவர்களின் உறவுகளால் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Leave a Reply