இந்தியக் கடற்படையால் 11 இலங்கை மீனவர் கைது!

அத்துமீறிய மீன்பிடிக் குற்றச்சாட்டுக்காக 11 இலங்கை மீனவர்கள், இந்தியக் கடற்படையால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையில் இருந்து மீன்பிடிப்பதற்காக இரண்டு படகுகளில் சென்ற 11 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளர். அவர்கள் ஆந்திர மாநிலம் – காக்கிநாடா முறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்களிடம் இருந்து 200 கிலோ மீன்களும் அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply