மாணவர் சீருடை குறித்து கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

2023ஆம் வருடம் முதலாம் தவணைக் காலப்பகுதியில் மாணவர்களுக்கு பாடசாலை சீருடை வழங்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மாணவர்களுக்கான சீருடைத் தேவையில் 70 வீதம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் எஞ்சிய 30 வீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply