மாற்று ஆடைகளை அணிந்து வந்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

சேலை மற்றும் ஒசரிக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து நேற்று பாடசாலைக்கு வந்த ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் சாந்த பண்டார தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் இது தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் கல்வி அமைச்சரினால் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply