தாயக விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூறும் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் இன்றாகும்.
இன்றையதினம் இலங்கை உட்பட தமிழர் வாழும் உலக நாடுகளிலும் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில்தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் கப்டன் பண்டிதரின் இல்லத்தில் இன்றைய தினம் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
வல்வெட்டி துறையில் உள்ள கப்டன் பண்டிதரின் இல்லத்தில் இன்றைய தினம் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்ககத்தின் ஏற்பாட்டில் பண்டிதரின் தாயாரால் பண்டிதரின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.