இன்று காலை முதல் மாவீரர் ஷங்கர் மற்றும் மாவீரர் பண்டிதர் வீடுகளில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறையில் உள்ள சங்கர் இல்லத்திலும் பண்டிதர் இல்லத்திலும் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பண்டிதரின் தாயார் பண்டிதரின் திருவுருவப் படத்தை ஏற்றி வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.