தாயக விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூறும் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் இன்றாகும்.
இந்நிலையில் இன்றையதினம் இலங்கை உட்பட தமிழ் மக்கள் வாழும் உலக நாடுகளிலும் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.
இவ்வாறான நிலையில் யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுதூபியில் சற்றுமுன் பல்கலைக்கழக மாணவர்களால் மலரஞ்சலி மற்றும் அக வணக்கம் செலுத்தப்பட்டது.