வடமராட்சியில் மாவீரர்களுக்கு ஈகைச்சுடரேற்றி அஞ்சலி!

வடமராட்சி உடுப்பிட்டி – எள்ளங்குளம் மாவீரா் துயிலும் இல்லத்திற்கு அருகில் மாவீரா் நாளான இன்று வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினரால் மாவீரா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 

மாவீரா் துயிலும் இல்ல வளாகத்தில் 551வது படைப்பிாிவு முகாம் அமைத்து தங்கியுள்ள நிலையில் துயிலும் இல்லத்திற்கு வெளியே ஈகை சுடரேற்றி மாவீரா்களுக்கு அஞசலி செலுத்தப்பட்டிருக்கின்றது. 

இதன்போது குறித்த பகுதியில் வீதியின் இரு பக்கங்களிலும் வீதி மறிப்புக்கள் போடப்பட்டு இராணுவத்தினா் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *