<!–
மக்கள் போராட்டம் இன்னும் ஓயவில்லை என்பது ராஜபக்ஷர்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி .லால்காந்த தெரிவித்தார்.
பூண்டுலோயா பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பேசிய அவர், விமான நிலையம் வந்த பசிலுக்கு அவரின் சகாக்கள் மற்றும் அடியாட்களால் வழங்கப்பட்ட வரவேற்பு குறித்தும் அவர் அதிருப்தி வெளியிட்டார்.
கொள்ளையர்கள் மற்றும் பொருளாதாரத்தை நாசமாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட வளங்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என மக்கள் தொடர்ந்தும் போராடுவதை கருத்திற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.