
இந்தியா சென்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பழனி முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இந்தியாவில் இடம்பெறும் இளம் தொழில் முனைவோர் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக விசேட அழைப்பின் பேரில் இந்தியா சென்றார்.
இந் நிலையில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படும் பழனி முருகன் ஆலயத்திற்கு சென்ற ஆளுநர் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.





