
வடமாகாண கல்வி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாம் தவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் உதயகுமார் அறிவித்துள்ளார்.
வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாம் தவணை எழுத்துப் பரீட்சைகள் நாளை மறுதினம் 30 திகதி ஆரம்பமாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.
எனினும் 30 ம் திகதி நடைபெறவிருந்த தரம் 6,7,8,9 மாணவர்களுக்கான பரீட்சை எதிர்வரும்14.12.2022 அன்றும் 30ம் திகதி நடைபெறவிருந்த தரம் 10, 11 மாணவர்களுக்கான பரீட்சை (20/12) ம் திகதிக்கும் மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.





