யாழில் போதையில் தள்ளாடிய 2 பொலிஸார் செய்த காரியம் – மடக்கிப் பிடித்த மக்கள்

யாழ்ப்பாணம் முளவைச்  சந்திப் பகுதியில் மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், வீதியில் பயணித்த வான் ஒன்றினை இடித்துவிட்டு, தாங்கள் பொலிஸ் என கூறி தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.

இதன்போது அவர்கள் அவ்வூர் மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு தற்பொழுது யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்திலும் மற்றையவர் ஐயன் குளம் பொலிஸ் நிலையத்திலும் கடமை ஆற்றுபவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply