யாழ்ப்பாணம்,நவ 28
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்து 5 படகுகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 24 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து இன்று (28) காலை புறப்பட்ட மீனவர்களின் ட்ரோலர் படகுகளே இவ்வாறு கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு பிடிக்கப்பட்ட படகுகள் நாளை காலை மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது.
இதேநேரம் பிடிக்கப்பட்ட 5 படகுகளில் இருந்த 24 மீனவர்களும் நாளை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.