அமெரிக்காவுக்கு பறந்தார் அலி சப்ரி!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் அந்தோனி பிளின்கனின் அழைப்பின் பேரில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சின் மூன்று மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விஜயத்தின்போது, அவர் ​​அமெரிக்க எய்ட் நிர்வாகி சமந்தா பவரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 280,000இற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *