களுத்துறை உட்பட பல பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்!

களுத்துறை உட்பட பல பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 08.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, வாதுவ, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய, மொறொந்துடுவ, கட்டுகுருந்த, நாகொட, பொம்புவல மற்றும் பிலமினாவத்தை ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

களுத்துறை அல்விஸ் பிளேஸ் நீர் குளத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *