தமிழ்நாடு ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழ்நாடு ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் திராவிட கழக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கண்ணதாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

2021 செப்டம்பர் 18ல் தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்ற நாளில் இருந்து பிரச்சனைக்குரிய நபராகவே உள்ளார் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம் பற்றியும், திராவிட கொள்கைகளுக்கு எதிராகவும் ஆளுநர் ரவி பேசி வருகிறார் என மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *