எல்லை தாண்டி மீன் பிடித்த தமிழக மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

<!–

எல்லை தாண்டி மீன் பிடித்த தமிழக மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு – Athavan News

சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 24 தமிழக மீனவர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளார்.

யாழ். காரைநகர் கடற்பரப்பில் நேற்று (திங்கட்கிழமை) இரவு சட்டவிரோதமாக நுழைத்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்களின் ஐந்து படகுகளை கைபற்றிய கடற்படையினர் படகில் இருந்த 24 மீனவர்களையும் கைது செய்தனர்.

இதற்கமைய ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் இன்று அவர்களை முற்படுத்தப்பட்ட நிலையிலே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *