இலங்கை முதலீடுகளுக்கு ஏற்றது என்பதை உலகுக்குக் காட்ட வேண்டும்

முதலீடுகளுக்கு உகந்த நாடு இலங்கை என்பதை உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வர்த்தகம் செய்வதற்கான இலகுவான சுட்டெண்ணில் தரவரிசையை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சிரமங்களை ஆராய்ந்து அதன் முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்காக பாராளுமன்றத்தின் முதலாவது தெரிவுக்குழு கூட்டத்தில் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் விதானகே தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, முதலீடுகள் மற்றும் வணிகங்களை ஊக்குவிக்க வேண்டிய அந்நியச் செலாவணியைப் பெறுவது அவசியம் என்றும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

முதலீடுகளுக்கு இலங்கை பொருத்தமானது என்பதை உலகம் காண வேண்டும் எனவும், இது தொடர்பில் தேவையான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான பிரேரணைகளை முன்வைப்பதற்கு தேவையான வழிமுறைகளை ஊடகங்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

முதலீட்டாளர்களுக்கு அனுமதி பெற ஒரு நிறுவனத்தை நிறுவ வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

Leave a Reply