ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது தொடர்பில் கல்வியமைச்சர் அறிவிப்பு

அரச ஊழியர்களைப் போன்று ஆசிரியர்களை இடமாற்றம் செய்யாமல் மாணவர்களின் தேவைகளை கருத்திற்க் கொண்டு அவர்களை உரிய முறையில் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் கல்விக்கான பிரதான திட்டத்தின் வரைவு சமர்ப்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரச ஊழியர்களை இடமாற்றம் செய்வது போன்று ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்தால் பிள்ளைகளுக்கான பாடங்களை உள்ளடக்குவதில் சிக்கல்கள் ஏற்படும். என அமைச்சர் தெரிவித்தார்.

நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாத காரணத்தால் வேலைவாய்ப்பு, ஆசிரியர் சங்கங்கள், இடமாறுதல் சபை முரண்பாடுகள் என பல நிர்வாக சிக்கல்கள் எழுந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு நீண்ட காலமாக இருந்தும், அது முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. அடுத்த தொழில் புரட்சியை எதிர்கொள்ளும் தருவாயில், தொழில்நுட்பத்தில் மிகவும் பின்தங்கியுள்ளோம்.

எதிர்காலத்தில் சீர்திருத்தங்களுக்கு அப்பால் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் மேலும் பல நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, புரட்சிகரமான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply