அரச சேவையில் பணிபுரியும் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ உடை தொடர்பான சுற்றறிக்கைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இதனை அறிவித்துள்ளார்.
அதன்படி, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி மற்றும் 2022 செப்டம்பர் 27 ஆம் திகதிகளில் வௌியிடப்பட்ட சுற்றறிக்கைகளே இரத்துச் செய்யப்பட்டுள்ளன.