விவசாயிகளை நேரடியாக சென்றடையக் கூடிய வகையில் அனுகூலங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருந்தோட்டத்துறை, வடக்கு – கிழக்கு மற்றும் தென்னிலங்கை விவசாயிகளுக்கு தனியார் துறை சார்ந்த அரச சார்பற்ற அமைப்புகள் வழங்கும் ஊக்குவிப்புகளை போன்று அரசாங்கமும் நன்மைகளை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியுள்ளார்.
அதே போன்று, அமைச்சர் ரமேஸ் பத்திரன போன்ற நல்ல அமைச்சர்கள் வகுத்துள்ள திட்டங்களை தாம் வரவேற்பதாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் குறிப்பிட்டார்.





