மத்திய வங்கியின் ஆளுநரிடம் ஜனாதிபதியின் ஆலோசகர் மன்னிப்பு கோரியுள்ளார்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளதாக ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மத்திய வங்கியின் ஆளுநர் தொடர்பில் அவர் அண்மையில் வெளியிட்டதாக கருத்து பொய்யானது எனவும் இவ்விடயம் தொடர்பில் தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த வாரம் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட ஆஷு மாரசிங்க, அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நந்தலால் வீரசிங்க தயாராகி வருவதாக குற்றம் சுமத்தினார்.

இது தொடர்பில் தேவையான பிரசார நடவடிக்கைகளை கலாநிதி நந்தலால் வீரசிங்க ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் பேராசிரியர் ஆஷு மாரசிங்க மேலும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *