யாழிலிருந்து முல்லைத்தீவுக்கு களவெடுக்கச் சென்ற 5 பேர் – மரத்தில் கட்டி வைத்து நன்றாக கவனித்த இளைஞர்கள்

 புதுக்குடியிருப்பு 8 ஆம்  வட்டாரப்  பகுதியில் வீடு ஒன்றை உடைத்து கொள்ளையிட முயற்சித்த 5 பேர் கொண்ட கும்பலை, அந்தப்  பகுதி இளைஞர்கள் மடக்கிப்பிடித்து நையப்புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

 இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றது.

அதிகாலை 2 மணியளவில் வீட்டை உடைத்து 5 பேர் அடங்கிய குழு ஒன்று கொள்ளையிட முயற்சித்துள்ளனர்.வீட்டின் உரிமையாளர் விழிப்படைந்து சத்தமிட்டுள்ளார். கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.

இதனை அடுத்து  பிரதேச மக்கள்  ,இளைஞர்கள் ஒன்றிணைந்து தேடுதலில் ஈடுபட்டனர். மந்துவில் பகுதியில்  3 போரையும், ஏனைய இருவரையும் இரணைப்பாலைப்  பகுதியில் வைத்து பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர் கவனித்துள்ளனர்.

 அதன் பின்னர் சந்தேக நபர்களையும் , கூரிய  ஆயுதங்களையும் பொது மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் .சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம்,சங்கானை  உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர என்றும், உடந்தையாக செயற்பட்டவர் இரணைப்பாலையைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார்  தெரிவித்தனர்.

Leave a Reply