சீனா நாட்டின் அரிசி கிளிநொச்சிக்கு வருகை!

சீனா நாட்டில் இருந்து வடமாகாணத்துக்கு சுமார் 9 லட்சம் கிலோ கிராம் அரிசி பாடசாலை மாணவர்களுக்கு  சீனா அரசாங்கம் வழங்கியுள்ளது.


கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கு அமைவாக சீனாவுடனான இலங்கையின்  இராஜதந்திர உறவு மூலம்  சீனா நாட்டிடமிருந்து இவ் அரிசி இறக்குமதி செய்யப்பட்டு மாகாண கூட்டுறவு சங்கங்களின் சமாசத்திடம் ஒப்படைக்கப்பட்டு இன்று கிளிநொச்சி அரச தானிய களஞ்சிய சாலையில் களஞ்சிய படுத்தப்பட்டு எதிர்வரும் நாட்களில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.  

பாடசாலை மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைவாக காணப்படுவதால் இவ்வாறான   இராஜதந்திர உறவு மூலம்  உதவிகள் பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

இது தொடர்பாக மாகாண கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் பொதுமுகாமையாளர் ஜீவநாயகம் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *