சட்டவிரோதமாக கிருமிநாசிநிகளைக் கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர் கைது!

சட்டவிரோதமாக கிருமிநாசினிகளைக் கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர் கரம்பைப் பகுதியில் வைத்து நேற்று இரவு புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரம்பைப் பகுதியிலிருந்து நாகவில்லு பகுதிக்கு சட்டவிரோதமாக கிருமிநாசினிகளைக் கடத்திச் செல்வதாக புத்தளம் பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது 5 கிலோ பக்கற்றுகள் அடங்கிய 148 பக்கற்றுகள் கிருமிநாசினி பக்கற்றுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அல்காஸிம் சிட்டி பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளப் புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகய் தெரிவித்தனர்.

Leave a Reply