8 மாதங்களில் 477 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்

கொழும்பு,டிச 01

வருடத்தின் முதல் 8 மாதங்களில் 477 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளிநாடு சென்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

உத்தேச நியாயமற்ற வரித் திருத்தத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தொழில்சார்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் வேகமான போக்கினால் எதிர்காலத்தில் பல நெருக்கடிகள் ஏற்படக் கூடும் என குறிப்பிட்டார்.

Leave a Reply