சாணக்கியனுக்கு சீனா பதிலடி!

கொழும்பு, டிச. 2: இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நிதி அமைப்புகளை தாம் ஊக்குவித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோது, இலங்கையின் உண்மையான நண்பன் சீனா அல்ல என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், இலங்கையின் உண்மையான நண்பனாக சீனா இருந்தால், சர்வதேச நாணய நிதிய கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு சீனா ஏன் உதவவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், சாணக்கியனுக்கு பதிலடி தரும் வகையில் இலங்கையில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான பங்குதாரர் என்ற வகையில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களை உடனடியாக இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு சீனா ஊக்குவித்து வருகிறது. மேலும், நாட்டின் கடனை மறுசீரமைக்கும் முயற்சியில் இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர்களின் கூட்டங்களிலும் சீனா தீவிரமாக பங்கேற்றுள்ளது. இது தொடர்பாக,
சீனாவின் நிதி நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் மாதம் நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியை தாமதமின்றி தொடர்பு கொண்டன. பல்வேறு வங்கிகளின் பணிக்குழுக்கள் இலங்கைக்கு பயணம் செய்து வருவதுடன், இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன என்று சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply