நாட்டின் பொருளாதாரம், விவசாயம் தோல்வி! கைவிரித்த அமைச்சர்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் விவசாயம் ஆகிய இரண்டும் தோல்வியடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது விவசாயத்தை நம்பியிருக்கும் நாடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும், ஆனால் எடுக்கப்பட்ட தவறான கொள்கை முடிவுகளால் இந்தத் துறை தோல்வியடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மத்திய வங்கியில் கலாநிதி பட்டம் பெற்ற பலர் உள்ளனர், பின்னர் அவர்களும் தோல்வியடைந்துள்ளனர்.

225 பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது மாத்திரம் ஏன் குற்றம் சாட்டப்படுகிறது? பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டங்களை இயற்றுவதற்கும், அமைச்சர்கள் ஆளுகைக்கான கொள்கையை வகுப்பதற்கும் உள்ளனர்.

அதற்கான சிறந்த சூழலை யார் உருவாக்க வேண்டும்? உதாரணமாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் இஸ்ரேல் போன்ற வளர்ந்த நாடுகளை எடுத்துக் கொள்வோம்.

பொருளாதார வல்லுனர்களுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் அறிவியலின் உதவியுடன் கொள்கை வகுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. பொருளாதார வல்லுனர்களால் தனியாக இந்தப் பணியைச் செய்ய முடியாது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply