மூதூரில் புலியினமொன்று மடக்கிப் பிடிப்பு!

மூதூர் – 64 ஆம் கட்டை, ஐபல் நகர் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை  காலை “fishing cat” எனும் புலி இனமொன்று பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.இப் புலியானது சுமார் 3 அடி நீளமுடையாதாக காணப்படுகின்றது.


குறித்த புலியானது இப் பிரதேசத்தில் அச்சுறுத்தலாக இருந்ததோடு ஆடு, கோழி உள்ளிட்டவைகளை பிடித்து சாப்பிட்டு பிரதேச மக்களுக்கு இடைஞலாக இருந்துள்ளது.


இந்நிலையில் 64 ஆம் கட்டை, ஜபல் நகரைச் சேர்ந்த நபரொருவர் வீட்டுக் காணியில் பொறியொன்று வைத்துள்ளார்.அதில் அகப்பட்ட நிலையிலே இவ் புலியானது மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து “Fishing cat ” வகையைச் சேர்ந்த புலியை கந்தளாய் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.

Leave a Reply