பெண் பொலிஸாரை சீரழித்த ராணுவ சிப்பாய் கைது!

மாவனெல்ல பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 27 வயதான இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்திற்கு வந்த இருவர் தன்னை தகாத வார்த்தைகளால் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் கான்ஸ்டபிள் முறைப்பாடு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் உசாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் இராணுவ சிப்பாய் எனவும் சந்தேக நபரை மாவனல்லை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply