மோடியின் தொழிலதிபர் நண்பர்கள் ஊடகத்துறையிலும் கை வைத்துள்ளது ஆபத்தின் அறிகுறி – கே.எஸ்.அழகிரி கண்டனம்

பிரதமர் மோடியின் நெருங்கிய தொழிலதிபர் நண்பரான கவுதம் அதானி, ஊடகத் துறையிலும் கை வைத்துள்ளமை ஆபத்தின் அறிகுறி என கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாஜவின் ஆசியோடு ஊடகத்துறையிலும் அதானி ஊடுருவத் தொடங்கியுள்ளார் என குற்றம் சாட்டிய அவர், முகேஷ் அம்பானியும் இவ்வாறே செயற்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தின் 3 தூண்களையும் பதம் பார்த்து விட்டு நான்காவது தூணான ஊடகத்துறையிலும் கைவைத்துள்ளமை ஆபத்தின் அறிகுறியாகும் என்றும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

Leave a Reply