புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

நேற்று இரவு கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதத்தில் பேராதனை பகுதியில் வைத்து குறித்த ரயிலில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிலிமத்தலாவ, கங்கொட பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது பேராதனை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply