நாட்டின் இந்நிலைமைக்கு அரசியல்வாதிகள் பொறுப்பேற்க வேண்டும்: ஓமல்பே சோபித

உலக ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு, தென்னிலங்கையின் பிரதம சங்கநாயக கலாநிதி ஒமல்பே சோபித தேரரின் நன்கொடையால் சிறுவர்கள் பங்குபற்றிய நிகழ்ச்சி எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்றது.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பல அம்சங்கள் இங்கு நடைபெற்றன.

அதனையடுத்து, முழு இலங்கையும் அங்கவீனமடைந்துள்ளதாகவும், அதற்காக சிறுவர்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள இயலாமை நிலைக்கு அனைத்து அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply